Skip to main content

கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் உடைப்பு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

 

kallanai dam water flowing canal


ஜூன் 12- ஆம் தேதி அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். அதைத் தொடர்ந்து கல்லணையை வந்து சேர்ந்த தண்ணீரை அமைச்சர்கள் தண்ணீர் திறந்தனர். இந்நிலையில் கல்லணை கால்வாயில் கடந்த சில வருடங்களாகவே தண்ணீர் திறந்து சில நாட்களிலேயே உடைப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சை பகுதியில் சில இடங்களில் பெரிய உடைப்புகள் ஏற்பட்டு பிறகு தண்ணீரை நிறுத்தி கால்வாய் கரை உடைப்பு சரி செய்யப்பட்டது.

 

அதேபோல் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், வேம்பங்குடி கிழக்கு பகுதியில் 10 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 மணி நேரம் விவசாயிகளும், அதிகாரிகளும் போராடி உடைப்பை சரி செய்தனர். இந்த உடைப்பிற்கு காரணம் பிரதான சாலையாக உள்ள கல்லணை கரையில் எலி ஓட்டை போட்டதாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

 

அதனால் இந்த வருடம் முதலில் குறைவான அளவே தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் சென்றுள்ளது. ஜூன் 21- ஆம் தேதி இரவு தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் பகுதிக்கு கல்லணைத் தண்ணீர் வந்து பழையநகரம், மாவடுகுறிச்சி வழியாக பேராவூரணி பகுதிக்கு செல்லும் ஆனந்தவள்ளி வாய்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் பழையநகரம் பகுதியில் இன்று (24/06/2021) அதிகாலை குத்துப்பாலத்தில் மின் கம்பம் நடப்பட்டிருந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு பலமணி நேரம் தண்ணீர் வெளியேறியது. மேலும், மின்கம்பம் சாய்ந்ததோடு வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள காட்டாற்றில் குமிழி போல வெளியேறி ஓடியது. பல மணி நேரத்திற்கு பிறகு தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரி செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது.

 

இப்படி உடைப்பு ஏற்படும் இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குவதுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் பலமாக சரி செய்யாமல் சரிந்த மணல் மூட்டைகள் மேலேயே சில மணல் மூட்டைகளை அடுக்கி வைப்பதால் மேற்பனைக்காடு உள்ளிட்ட இடங்ளில் ஆபத்தான நிலையிலேயே கரைகள் உள்ளது. இதனால் தண்ணீர் வெளியேற்றும் அளவு குறைக்கப்படுவதால் பாசனத்திற்கும், கண்மாய்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.