Skip to main content

"ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.." - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

 

Jayalalithaa's death is suspected, says OPS Says no doubt today! DMDK. Interview with Treasurer Premalatha !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே பஞ்சம்தாங்கி பகுதியில் தே.மு.தி.க.வின் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வடிவேலின் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த விழாவில் கலந்துக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், "தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு நிச்சயமாக சாமானிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை நிச்சயமாக உயர்த்தும். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலையை திரும்பப் பெற வேண்டும். இன்றைய காலகட்டங்களில் ஒன்றிய அரசிற்கு பொருளாதார நெருக்கடி இருப்பதால், அந்த சுமையை மக்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக தந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்று ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக, தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆணையம், அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தர்ம யுத்தம் நடத்தியவர் ஓ.பி.எஸ். ஆனால் இன்று ஆணையம் அழைத்து அவரிடம் கேட்டபொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இல்லை என கூறியுள்ளார்.

 

ஆணையத்தை அமைக்க சொன்னதும் அவர் தான், அதற்காக மறுப்பு சொன்னதும் அவர் தான், எனவே, இந்த கேள்வியை என்னிடம் கேட்பதற்கு பதிலாக அண்ணன் ஓ . பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள், அவர் தெளிவாக பதில்சொல்லுவார்" என்று  கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.