Skip to main content

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மர்ம மரணம்; சிபிசிஐடி முக்கிய சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

Jayalalithaa car driver incident mysteriously; CBCID re-examination of key witnesses

 

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்ம மரணம் தொடர்பாக, முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர் செப்.1ம் தேதி விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

 

அவர் முதல்வர் பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில், ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு கனகராஜ்தான் மூளையாக செயல்பட்டார் என்று கூறப்பட்டது. அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் 2017 ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இரவு, ஆத்தூர் அருகே சந்தனகிரி புறவழிச்சாலையில் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, கனகராஜின் சாவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என அவருடைய அண்ணன் தனபால் புகார் கிளப்பினார். கனகராஜின் செல்போன் தடயங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆவணங்களை மறைத்ததாக தனபால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே இருக்கிறார்.

 

Jayalalithaa car driver incident mysteriously; CBCID re-examination of key witnesses

 

இந்நிலையில், கனகராஜின் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி புலனாய்வுப்பிரிவு ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான தனிப்படையினர் மீண்டும் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகக்  கூறப்படுகிறது. கனகராஜ் இறந்ததாகச் சொல்லப்படும் சந்தனகிரி புறவழிச்சாலை, அவருடைய சொந்த ஊரான சமுத்திரம் ஆகிய இடங்களில் செப். 1ம் தேதி நேரடியாக பார்வையிட்டு விசாரித்தனர்.

 

வழக்கு தொடர்பாக சில முக்கிய சாட்சிகளை, சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அழைத்து வந்தும் விசாரித்தனர். இதனால் கனகராஜின் மர்ம மரண வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Old woman incident by pillow; Police investigation

திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும்  வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.