Skip to main content

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டணமும் உயர்வு!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Airtel rate hike after Jio

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி நேற்று (27.06.2024) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் ரீ - சார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 3 முதல் இந்த புதிய கட்டணங்கள் அமலுக்கு வர உள்ளன. அதன்படி ப்ரி - பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வின் படி மாதாந்திர ரீ - சார்ஜ் கட்டணம் ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதாந்திர ரீ - சார்ஜ் கட்டணம் ரூ. 179 ரூபாயிலிருந்து ரூ. 199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜி.பி. டேட்டாவுடன் கூடிய மாத ரீ - சார்ஜ் ரூ. 265 இலிருந்து ரூ. 299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தினசரி 2 ஜி.பி. டேட்டாவுடன் கூடிய வருடாந்திர ரீ - சார்ஜ் தொகையானது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு ரூ. 3599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உயரும் ரீசார்ஜ் கட்டணம்; பிள்ளையார் சுழி போட்ட ஜியோ

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rising recharge charges;jio announce

மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் 24-06-24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பின் முதலாவது முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ தற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது.