Skip to main content

அது வாட்ஸ்அப் அவதூறு... மறுக்கும் திமுக விஐபி

Published on 26/11/2019 | Edited on 26/11/2019


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் அய்யாத்துரை பாண்டியன். கல்வி நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களைக் கொண்ட தொழிலதிபரான முக்கிய வி.ஐ.பி. அண்மையில் தான் ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தவர் அய்யாத்துரை பாண்டியன். பின் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பொறுப்பைப் பெற்று  மாவட்ட அரசியலில் பரபரப்பான புள்ளியானார்.

 

 It is a WhatsApp slander ... denying DMK VIP


கடந்த வாரம் தென்காசி புதிய மாவட்டத்தினைத் திறந்து வைத்ததில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உள்ளிட்ட சக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அதையடுத்து மூன்று நாட்களுக்குப் பின்பு, அய்யாத்துரை பாண்டியன் ஓ.பி.எஸ்.சுக்கு பூங்கொத்துக் கொடுக்க, அருகில் அ.தி.மு.க., மா.செ.தச்சை கணேசராஜா நிற்கிற படம் ஒன்று, வாட்ஸ்அப்பில் பரவி வைரலானது. அத்துடன், தி.மு.க. புள்ளியான நீங்கள், தச்சை கணேசராஜா மூலம் ஓ.பி.எஸ்.சைச் சந்தித்தது உண்மையா என்ற வாசகங்கள் வந்தது மேற்கு மாவட்ட தி.மு.க. அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு சூட்டைக் கிளப்பியது. பலவாறான பேச்சுக்கள் றெக்கை கட்டின.

 

 It is a WhatsApp slander ... denying DMK VIP


நாம் மே.மா.செ. சிவபத்மநாபனைத் தொடர்பு கொண்டு பேசியதில், அது, அவர் தி.மு.க.விற்கு வருவதற்கு முன்பான பழைய படம். அவரைப் பிடிக்காதவர்கள் அந்தப் படத்தை தற்போது வாட்ஸ்அப்பில் போட்டு அவதூறு பரப்புகிறார்கள். தற்போது அது போன்றதொரு சம்பவம் நடக்கவில்லை என்கிறார்.

இதுகுறித்து அய்யாதுரை பாண்டியனின் உதவியாளரிடம் கேட்டதில்,

 

 It is a WhatsApp slander ... denying DMK VIP


அவர் தி.மு.க.வில் சேர்வதற்கு முன்பாக கடந்த 2018ல் நாகர்கோவிலில் நடந்த, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்சியின் போது வந்த ஓ.பி.எஸ்சை மரியாதை நிமித்தம் சந்தித்த போது எடுத்த பழைய படம். அதைத் தற்போது  வாட்ஸ்அப்பில் வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள். குறிப்பிட்டது போன்றது நடக்கவில்லை. அன்றைய தினம் தென்காசியில் தி.மு.க.வின் தென்காசி எம்.பி. அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அய்யாத்துரை பாண்டியன், மாலையில் தன் சொந்த செலவில் கடையநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகிழ்ச்சியாகப் பலபேர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளார். என்கிறார்.

வாட்ஸ்அப் வீச்சுக்கு எல்லை இல்லை போலும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்