Skip to main content

காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல: ரஜினிகாந்த்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018


காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலா படத்தை வெளியிட முடியாது என்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை போயஸ்கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புபற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல, இதை புரிந்து கொள்ள வேண்டும்.

காலா எதிர்ப்புக்கு கன்னட திரைப்பட வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்சனையின்றி வெளியடுவதுதான் வர்த்தக சபையின் வேலை, வர்த்தக சபை தடை விதிப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்