Skip to main content

மீண்டும் சூடுபிடிக்கும் பழனி சிலை மோசடி! அதிகாரிகள் விசாரணை!

Published on 03/12/2020 | Edited on 04/12/2020

 

pazhani


பழனியில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளதால், ஊழியர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நவபாசன சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது. இந்தச் சிலை சேதமடைந்ததாகக் கோரி கடந்த 2004 ஆம் ஆண்டு ஐம்பொன்னாலான புதிய சிலை வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிலை மூலவர் சந்நிதானத்திலே வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஒரே கருவறையில் இரண்டு சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது, ஆகம விதிகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்தச் சிலை அகற்றப்பட்டு கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சிலை மோசடி வழக்கு விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலையைச் சோதனை செய்தனர். அதில் போதிய அளவு தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும், இதில் மோசடி நடந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டது. அதனையடுத்து சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிலை வடிவமைக்கப்பட்ட காலத்தில் பணியில் இருந்த, இணை ஆணையர் ராஜா மற்றும் நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன், புகழேந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடி நடந்ததாகக் கூறப்பட்ட சிலை கும்பகோணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடமாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ஓய்வுக்குப் பிறகு, இந்த வழக்குக் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகப் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்துவந்தனர்.

 

இந்தநிலையில், மீண்டும் வழக்கு விசாரணையைத் தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலை மோசடி வழக்கில் கைதானவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தற்போது, மீண்டும் சிலை மோசடி விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி மாதவன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் பழனிக்கு வந்தனர். அவர்கள் இதுவரை சிலை மோசடி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு பழனி கோவிலில் பணியில் இருந்த அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பழனி கோவில் சிலை மோசடி வழக்குக் குறித்து மலைக் கோவிலுக்குச் சென்று பல்வேறு தரப்பினரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர். இதனால், கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.