Skip to main content

எட்டு வருடங்களுக்கு முன் 38 உயிர்களைப் பறித்த வெடி விபத்து அது! அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கியதில் பலி!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
It was an incident that claimed 38 lives eight years ago!

 

எட்டு வருடங்களுக்கு முன், தேசத்தையே உலுக்கிய கோர நிகழ்வு அது.  2012, செப்டம்பர் 5-ஆம் தேதி, சிவகாசியை அடுத்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலை, அப்பட்டமான விதிமீறலுடன் இயங்கியபோது விபத்துக்குள்ளானது. அந்த வெடி விபத்தில் கருகி, 38 பேர் மாண்டு போனார்கள்.

அந்த பட்டாசு ஆலை, அப்போது விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருந்த முருகேசனுக்குச் சொந்தமானது, அதை அவர் லீசுக்கு விட்டிருந்தார். அந்த வழக்கில் முருகேசனும் உள் குத்தகைதாரர்கள் 11 பேரும் கைதானார்கள். அப்போது, விபத்துக்கு காரணமான விதிமீறல்கள் குறித்து,  நக்கீரன் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டது.

காலச்சக்கரம் எப்படியெல்லாம் சுழல்கிறது பாருங்களேன்! அந்த நேரத்தில் பட்டாசு ஆலை உரிமையாளராக இருந்த முருகேசன், தற்போது, விருதுநகர் அருகிலுள்ள நல்லமநாயக்கன்பட்டியில், பிளேவர் பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரான அவர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், 12-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினரும் ஆவார்.

 

It was an incident that claimed 38 lives eight years ago!


அந்த தொழிற்சாலையில், தரையில் பதிக்கப்படும் கற்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ளும் மோட்டார், இன்று (6/2/2020) பழுதானது. பழுது பார்த்து முடிந்ததும், மின்னிணைப்பு தந்துள்ளனர். அப்போது மோட்டார் பாகங்கள் முறையாக இணைக்கப்படாத நிலையில், அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக, மோட்டார் தூக்கி எறியப்பட்டபோது, பழுது பார்த்த முருகேசனின் முகத்தில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதனால், சம்பவ இடத்திலேயே, அவர் இறந்துபோனார்.

விபத்துகளுக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரிவதில்லையே! 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.