Skip to main content

தகவல் பெறும் உரிமை சட்டப்படி ஊராட்சி ஆவணங்களை ஆய்வுசெய்த தனிமனிதர்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

An individual who examined panchayat documents under the Right to Information Act ...

 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது ராமநத்தம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்படி ராமநத்தம் ஊராட்சி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோவிந்தசாமி, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநத்தம் ஊராட்சியின் ஆவணங்களை ஆய்வு செய்து பார்வையிட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தார். 


இதையடுத்து ஆணையத்தின் பொது தகவல் அலுவலர், கோவிந்தசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தாங்கள் கேட்டு கொண்டுள்ளபடி ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊராட்சியின் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்ற அனுமதி வழங்கி கடிதம் அனுப்பி இருந்தார். 

 

அதேபோல் ராமநத்தம் ஊராட்சிக்கும் பொதுத்தகவல் அலுவலர் அனுப்பிய கடிதத்தில் கோவிந்தசாமி தங்கள் ஊராட்சி ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு, அக்டோபர் 20ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிந்தசாமிதமக்கு  அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின்படி 12ஆம் தேதி ராமநத்தம் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்ற கோவிந்தசாமியிடம் தங்களுக்கு வந்த கடிதத்தில் அக்டோபர் 20ஆம் தேதிதான் தங்களுக்கு ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது என்று கூறி கோவிந்தசாமியை திருப்பி அனுப்பி விட்டனர். 

 

பிறகு பொதுத்தகவல் அலுவலர் கிராம ஊராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின்படி, நேற்று 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மீண்டும் ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு கோவிந்தசாமி சென்றார். ஊராட்சி செயலாளர் பிரேம், தகவல் பெறும் உரிமை சட்டப்படி  கோவிந்தசாமி ஊராட்சி கணக்கு வழக்குகளை ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதித்தார். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊராட்சியில் வரவு செலவு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார் கோவிந்தசாமி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி ஒரு ஊராட்சி ஆவணங்களை ஒரு தனிநபர் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது சமூக அக்கறையுள்ள பல்வேறு தரப்பினரிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.