Skip to main content

பள்ளிக்கரணை அருகே டாஸ்மாக்கில் கைகலப்பு... இருவர் கொலை!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019
chennai

 

சென்னை பள்ளிக்கரணை அருகே பெரும்பாக்கத்தில்  டாஸ்மாக் மது விற்பனை செய்தபோது ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு டாஸ்மாக்கை பூட்டிய பின் சட்டவிரோதமாக மதுபானம் வாங்க வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பார் ஊழியர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மது வாங்க வந்த இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளிக்கரணையை சேர்ந்த  ஸ்டீபன், ஆனந்தை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்