Skip to main content

பைக்கில் வேகமாகச் சென்றதைத் தட்டிக்கேட்டதால் வீடுகள் சூறை... நெல்லையில் பரபரப்பு!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

நெல்லை மாவட்டத்தின் கூடன்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் புதுமனையின் இந்திரா காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் கதிரவன் சிவன்மணி. இருவரும் அங்குள்ள கோவிலின் முன்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் பைக்கில் இருவர் வேகமாகச் சென்றதைச் சகோதரர்கள் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகாராறு ஏற்பட்டு அடித்துக்கொண்டார்கள். உடனே அப்பகுதியினர் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

 

பின்னர் பைக்கில் சென்றவர்கள் தங்களின் உறவினர்களிடம் விவகாரத்தைத் தெரியப்படுத்தி அவர்களை இந்திரா காலனிக்கு வரவழைத்தனர். அந்தக் கும்பல் காலனியிலுள்ள வீடுகளைக் கற்கள் கொண்டு தாக்கியதால் 10 வீடுகள் தேசமடைந்தன. அங்கு நின்றிருந்த 8 பைக்குகளையும் அடித்து நொறுக்கியவர்கள் சகோதரர்களான சிவன்மணி, கதிரவனையும் கடுமையாகத் தாக்கிவிட்டுத்த் தப்பியோடினர்.

 

இதையடுத்து சகோதரர்கள் சிகிச்சைக்காக கூடன்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். இதனால் இரண்டு தரப்பிற்குமிடைய பதற்றச்சூழல் ஏற்பட்ட நேரத்தில், தாக்கியதுடன் வீடுகளை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திரா காலனி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து கூடன்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். மேலும், புதுமனைப் பகுதியைச் சேர்ந்த சிவராமன், சஞ்சய், பாலகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன் உள்பட 4 பேரைக் கைது செய்தனர். அதனைக் கண்டித்து அவர்களின் உறவினர்கள் பொது மக்கள் நேற்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து முற்றுகை விலக்கப்பட்டது.

 

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி மணிவண்ணன் மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். இருதரப்பினரின் பதற்றத்தைத் தனிக்க வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமைசிங் மீனா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவத்தால் சற்று பரபரப்பானது அந்தப்பகுதி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.