Skip to main content

“40 வருசமா 'ஃபேர் அண்ட் லவ்லி' போடுறேன்... ஒரு மாற்றமும் இல்ல” - அமைச்சர் மா.சு. கலகல  

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 "I have been put  'Fair and Lovely' for 40 years; There is no change'' - Minister

 

தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 'ஃபேர் அண்ட் லவ்லி' குறித்து கலகலப்பாகப் பேசியது கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

நிகழ்ச்சி ஒன்றில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ''ராஜஸ்தான் இளைஞர் அமைப்பினர் 'திருப்தி' என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். பொதுவாக திருப்தி என்கின்ற பெயர் ஒரு அதிசயமான வார்த்தை. யாருக்குமே எதுலயுமே திருப்தி வராது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே நாம் போட்ட சட்டையை நாமே திருப்பி திருப்பி பார்த்துக் கொள்வோம். சட்டை கொஞ்சம் லூசாக இருந்தாலும் வேற சட்டை மாற்ற வேண்டும். பேண்ட் கொஞ்சம் லூசாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாமா? சட்டைக்கும் பேண்டுக்கும் மேட்ச் ஆகவில்லையே, வேற மாற்றிக் கொள்ளலாமா என காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போதே திருப்தியாக கிளம்ப மாட்டோம்.

 

இப்பொழுது என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி' எடுத்துக் கொண்டுதான் வெளியே வருகிறார்கள். ஏனென்றால் 40 வருடத்திற்கு முன்னாடி அந்த 'ஃபேர் அண்ட் லவ்லி' வந்த பொழுது சொன்னார்கள், கருப்பா இருப்பவர்கள் எல்லாம் சிகப்பாக ஆகிவிடுவார்கள் என்று. அப்பொழுது வாங்கி போட ஆரம்பித்தேன். 40 வருஷம் ஆச்சு இன்னும் எந்த மாற்றமும் இல்லை. அதை தயாரித்தவர்களையும் விளம்பரப்படுத்தியவர்களையும் தேடுகிறேன்... கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள். இப்பொழுது என்னவென்றால், எங்கேயாவது ஒருநாள் வெளியூர் போகிறோம் அல்லது வெளிநாட்டுக்கு போகிறோம் என்றால், 'ஃபேர் அண்ட் லவ்லி' எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டோம் என்றால் அன்று முகத்தில் பொரி பொரியாக வந்துவிடும். இப்பொழுதெல்லாம் எதை எடுத்துக் கொண்டு போகிறேனோ இல்லையோ, பேனா, பென்சில் எடுத்துக்கொண்டு போகிறேனோ இல்லையோ... என் பெட்டியில் ஒரு 'ஃபேர் அண்ட் லவ்லி' இருக்கும். எனவே இந்த வாழ்க்கை திருப்தி இல்லாதது. வாழ்வில் போதும் என்று சொல்ல வேண்டும் என்றால் அது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். வயிறார சாப்பிட்டுவிட்டு திருப்தி என்று சொல்லுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.