Skip to main content

''அதிமுகவையே எதிர்த்து பிரச்சாரம் செய்தவன் நான்'' -சரத்குமார் பேட்டி

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

 "I am the one who campaigned against AIADMK" - Sarathkumar interview

 

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் 'சமத்துவ விருந்து' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

 பாமக அன்புமணியின்  என்.எல்.சி எதிர்ப்பு போராட்டம் குறித்த கேள்விக்கு,

 

''பாமக தலைவர் அன்புமணி கூட விலை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்எல்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு. நாளைக்கு உள்நாட்டிலேயே அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என கணிப்புகள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் விளைநிலங்களை அபகரித்து அந்த இடத்தில் என்எல்சி சுரங்கம் அமைப்பது அடுத்தகட்ட மிகப்பெரிய ஆலைகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக அமைந்துவிடும். உடனடியாக மத்திய அரசு அதனை நிறுத்த வேண்டும். அதை நாங்களும் வலியுறுத்த ஆசைப்படுகிறோம்'' என்றார்.

 

 தமிழக பாஜக நடத்தும் யாத்திரை குறித்த கேள்விக்கு,

 

 

''அந்த கட்சியில் யாத்திரை நடத்தலாமா கூடாதா என்று நான் சொல்ல கூடாது. அவரவர்கள் கட்சியை அவர்கள் வலுப்படுத்துவதற்காக பிரச்சாரத்தை கொண்டு போகிறார்கள். 2024 பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அந்த பாராளுமன்ற தேர்தலுக்காக முன்னோட்டமாக மக்களுடைய மனநிலை அறிவதற்காக சென்று இருக்கலாம். கருத்துக்கணிப்பு கேட்கலாம். அவர்களின் நிலைப்பாடு என்ன, மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை கேட்பதற்கான பயணமாக இதை எடுத்துக் கொள்ளலாம். அண்ணாமலை மத்திய அரசிடம் அந்த என்எல்சி திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

 

விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத்குமார்,

 

''இந்த கேள்விக்கு பலமுறை நான் பதில் சொல்லிவிட்டேன். இந்த நாட்டில் இருக்கின்ற எல்லாருமே அரசியலுக்கு வரலாம். கல்வியாளர்கள் பாடத்திட்டங்களில் 14 வயது பசங்களும் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அது ஒரு மாற்றத்தை கொண்டு வரும். ஜனநாயகம் என்ன; தேர்தல் முறைகள் என்ன; வருங்காலத்தில் நீங்கள் தலைவராக வரும் பொழுது நீங்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது அரசியலை தெரிந்து கொள்ளுங்கள். அதுபோல தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரையும் வரவேற்கிறோம்.

 

1996 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். கலைஞர்களிலேயே நான் தான் மூத்தவன். 1996-ல் அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தவன் நான். அன்றிலிருந்து இன்னைக்கு வரை நான் அரசியல் களத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை அந்தந்த இயக்கங்கள்  மற்ற கட்சியில் இருந்து வருகிறார்கள் அல்லவா, அவர்களை வேண்டாம் என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். இங்கிருந்து அங்க வரலாம் அங்கிருந்து இங்கு போகலாம் என்றால் அது சரியாக வராது என்பது என்னுடைய கருத்து. ஒவ்வொரு இயக்கமும் எதற்காக துவங்கப்படுகிறது என்பதில் உறுதியாக இருந்தால் மக்களுக்கு நல்லது'' என்றார்.

 

.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.