Skip to main content

வீட்டிலிருந்தே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கலாம்!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகள் இணைய தள மிண்ணணு சேவைக்கு மாறியுள்ளனர். மேலும் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய பங்கை வகிப்பது "National Informatics Centre" நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அரசுக்கு தேவையான இணையதள பக்கங்களை உருவாக்கித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் இணைய தளம் மூலமாக பொதுமக்கள் மனு அளிக்கும் வகையில் இதற்கென இணைய தள பக்கங்களை உருவாக்கியுள்ளது " National Informatics Centre". இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த இணைய தள பக்கத்தின் முகவரி : gdp.tn.gov.in ஆகும்.  இதில் பொதுமக்கள் , ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தவாரே இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளிக்கலாம்.

online petition

மனுதாரர் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று முதலில் தங்கள் தொலைபேசி  எண்ணை மனுதாரர் பதிவிட வேண்டும்.பின்பு அந்த தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் வரும். இதில் ரகசிய குறியீட்டு எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த எண்ணை பதிவிட்டால் மட்டுமே உள்ளே (Login) நுழைய முடியும். பின்பு தங்கள் பெயர் , முகவரி , மாவட்டம் , எந்த துறை சமந்தமாக மனு செய்ய உள்ளோம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு மனுதாரர் மனு தொடர்பான முழு விபரங்களை தமிழ் ( அல்லது ) ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். தாங்கள் அளிக்கும் மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் இந்த மனுவோடு பதிவேற்றம் செய்யலாம். இதன் பிறகு "SUBMIT" என்ற Option - யை கிளிக் செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். இதில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததற்கான "Acknowledgement No" இடம்பெற்றிருக்கும்.இந்த எண்ணை பயன்படுத்தி மனுதாரர் தான் அளித்த மனுவின் தற்போதைய நிலையை அறிலாம்.

online petition status

 மனுவின் நிலையை அறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன். இதில் ஒன்று குறுந்தகவல் மூலம் "Acknowledgement No" யை டைப் செய்து "155250" என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இந்த சேவை முற்றிலும் இலவசமாகும். இதன் பிறகு மனுவின் நிலை பற்றி குறுந்தகவல் வரும்  (அல்லது) gdp.tn.gov.in என்ற இணைய தளப்பக்கத்திற்கு சென்று  "Petition Status" என்ற Option இடம்பெற்றிருக்கும். இதில் மனுதாரரிடம் உள்ள "Acknowledgement No" பதிவிட்டு "Submit" செய்ய வேண்டும். பின்பு மனுவின் நிலையை அறியலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு. இந்த இணைய தள சேவை என்பது முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே படித்த இளைஞர்கள் இந்த சேவையை  பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு இணையதள சேவையை பயன்படுத்தி மனு அளித்து உதவிட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.