Skip to main content

ஒற்றைப் புகைப்படத்திற்குப் பின் பெரும் சோகம் - கனக்க வைத்த பி.சி. ஸ்ரீராம்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

 Great sadness after a single photo- P.C.Sriram

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பி.சி. ஸ்ரீராம். தமிழ்த் திரையுலகில் சில முக்கியமான திரைப்படங்கள் வரிசையில் இடம்பிடித்த மௌன ராகம், முகவரி, தேவர் மகன், நாயகன் உள்ளிட்ட பல படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பி.சி. ஸ்ரீராம். குருதிப்புனல், மீரா, வானம் வசப்படும் ஆகிய மூன்று திரைப்படங்களை  இவரே இயக்கியும் உள்ளார்.

 

அண்மையில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அது சுவரில் மாட்டப்பட்ட அவருடைய மகள் ஸ்வேதாவின் புகைப்படமாகும். அதை பி.சி. ஸ்ரீராம் பார்த்துக் கொண்டிருப்பது போல் அந்த புகைப்படம் இருந்தது.

 

அந்த புகைப்படத்திற்குப் பின்னால் ஒரு பெரும் சோகமே அடங்கி இருக்கிறது. காரணம், கடந்த 2012 ஆம் ஆண்டு கீழ்பாக்கம் லண்டன் சாலையில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பி.சி. ஸ்ரீராம் மகள் ஸ்வேதா, மொட்டை மாடியில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாகத் தவறி மாடியிலிருந்து சாலையில் விழுந்து உயிரிழந்தார். அப்போது அவருடைய வயது 23. அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருந்தார். இந்நிலையில், அவரது மறைவு குறித்த தனது சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் பி.சி. ஸ்ரீராம் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.