Skip to main content

மழை நீரில் மிதக்கும் அரசுப் பள்ளி... நடவடிக்கை எடுக்குமா அரசு?

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

வடகிழக்கு பருவமழை கடந்த சிலநாட்களாக பெய்து வருகிறது. மழை வந்த பிறகே முன் எச்சரிக்கை என்ற பெயரிலும் மீட்பு நடவடிக்கை அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

பள்ளிகள், அரசு அலுவலகம் என்று அனைத்துமே ஒவ்வொரு மழைக்கும் தெப்பக்குளமாக மாறிவிடுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கும் அதிகாரிகள் மழைக்காலம் போனதும் அதை மறந்துவிடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் அவதிப்படுவதும் நோயால் பாதிக்கப்படுவதும் மாணவர்கள்தான்.

 

Government school floating in rain water ... Will the government take action?


புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதியான கட்டுமாவடி, கிருஷ்ணாசிப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், உள்ளிட்ட கடலோர கிராமங்கள் ஏரிகள் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராமங்களை சூழ்ந்தது. அதனால் மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். இதற்கு என்ன காரணம் ஏரிகள் நிரம்பிய பிறகு கூடுதலாக வரும் தண்ணீர் வெளியேறும் வடிகால் வாரிகள் முழுமையாக கட்டிடங்களாலும், தடுப்பு சுவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே. அவசர உதவி மையங்கள் கூட வடிகால் வாரிகளில்தான் கட்டப்பட்டுள்ளது. மழை முடிந்த பிறகு அவற்றை சீரமைக்க அதிகாரிகள் தவறிவிடுகின்றனர். அதனால் வடிகால் தண்ணீர் கடலுக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சப்படுத்தி வெளியேற்றிவிட்டு கடலுக்கு செல்கிறது.

 

Government school floating in rain water ... Will the government take action?


அதேபோல அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலகம் பல வருடங்களாக முழுமையாக தண்ணீரில் தத்தளிக்கிறது. அந்த தண்ணீர் வெளியேறிச் சென்ற வடிகால் வாரிகள் காணாமல் போனதால் இன்றும் அந்த அவல நிலை தொடர்கிறது. அதேபோல மணமேல்குடி அரசுமேல்நிலைப்பள்ளி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து சாக்கடையாக காட்சி அளிக்கிறது. பள்ளி வளாகங்களில் பலநாட்களாக தண்ணீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் கொசு உற்பத்தியாகி மாணவர்களுக்கு காய்ச்சல் பொன்ற நோய்களையும் உற்பத்தி செய்கிறது.

 

Government school floating in rain water ... Will the government take action?


இனிமேலாவது பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களை நோய்களில் இருந்து காப்பாற்றலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.