Skip to main content

வேலை கிடைக்காத  மன உளைச்சல்; பரிதாப முடிவெடுத்த கெமிக்கல் என்ஜினியர் 

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Frustration of not getting a job; A sad end for a chemical engineer

                                                      கோப்புப்படம் 


நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (38). இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராதிகா, கூடலூரில் உள்ள பள்ளியில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சந்தோஷ்குமாருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில வருடங்களாக ஈரோட்டில் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட்டில் வேலை பார்த்து வந்தார்.

 

பின்னர் அந்த வேலையும் அவருக்கு ஒத்து வரவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சந்தோஷ்குமார் கடந்த ஒரு வருடமாக ஈரோடு, அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் ஈரோட்டில் சில ஆண்டுகளாகத் தங்கியிருந்த நிலையில் நாடார் மேடு, நேதாஜி வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் நண்பராகியுள்ளார்.

 

அதன்பின், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தினேஷுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அவருக்குத் தேவையான உதவிகள் செய்ய தினேஷ் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் தனது மனைவி ராதிகாவுக்கு ஃபோன் செய்த சந்தோஷ்குமார், நம் இருவருக்கும் சரியான வேலை இல்லை. குழந்தைகளை எப்படி வளர்ப்பது எனத் தெரியவில்லை. மேலும், தான் தினமும் மது குடிப்பதால் அடிக்கடி தனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் செத்துவிடலாம் போல உள்ளது என விரக்தியாக பேசியுள்ளார். அவருக்கு மனைவி ராதிகா ஆறுதல் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், இரவு 11 மணியளவில் தினேஷ் வீட்டில் உள்ள ஃபேன் மாட்டும் கொக்கியில், சந்தோஷ்குமார் கயிற்றால் தூக்குப் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.