Published on 24/09/2021 | Edited on 24/09/2021
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. அந்தஸ்து வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டி.ஜி.பி. அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து பேருக்கு டி.ஜி.பி. அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் டி.ஜி.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.