Skip to main content

“இரண்டு அமைச்சர்கள் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து  ராஜினாமா செய்ய வேண்டும்” - சி.வி.சண்முகம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Fasting struggle against the DMK government tindivanam

 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக சுமார் 1502 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

 

இதைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி. சண்முகம் தலைமையில் 27 ஆம் தேதி திண்டிவனத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Fasting struggle against the DMK government tindivanam

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய எம்.பி சண்முகம், “அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க அரசு ரத்து செய்து வருகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.  தமிழகத்தில் கமிஷன் அரசு தான் நடக்கிறது. கமிஷன் பெரும் ஏஜெண்டாக அதன் அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

 

பினாமி பெயரில் உள்ள பல்கலைக்கழகங்களை நடத்த அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களை ஸ்டாலின் மூடி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். இங்கு சில ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்படுகிறது. அந்தக் கால கட்டங்களில் குடிதண்ணீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும்  சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே தான் மாவட்ட மக்களின் நலனை முன்னிட்டு நல்ல தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் திண்டிவனம் போன்ற நகராட்சிகளும், மரக்காணம், கோட்டகுப்பம், செஞ்சி, அனந்தபுரம், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளும் 692 ஊராட்சிகளும் பயனடையும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சேலம் மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.

 

இது சிக்கலானது நடைமுறை, சாத்தியம் இல்லாதது. திமுக அரசு லஞ்சம் பெறுவதில் மட்டுமே உறுதியாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் அரசு திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அதற்கான தேர்வு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் செம்மண் கொள்ளை அடிப்பது யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.