Skip to main content

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Image

 

பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட பலவற்றை வலியுறித்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (ஜூலை 31) காலை 11 மணிக்கு தலைமை நிர்வாகி திரு நூ.ஷே.முஹம்மது அஸ்லம் தலைமையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

 

கரும்பு பெருக்க அலுவலர் வேணுகோபால், துணைத் தலைமை ரசாயணர் மாதவன், துணைத் தலைமைப் பொறியளர் மணிவண்ணன், தொழிலாளர் நல அலுவலர் ஆர்.இராஜாமணி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் செந்துறை ஞானமூர்த்தி, ராஜாஜெயராமன், ஏ.கே. இராசேந்திரன், நம்மக்குணம் சீனிவாசன், வரதராஜன் , தேவேந்திரன், பி.சி.இராமசாமி, சீகூர் பெருமாள், துங்கபுரம் சக்திவேல் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,

 

  • நடப்பு கரும்பு அரவையை 14-12-2020 இல் துவக்கலாம் என முடிவு செய்துள்ள ஆலை நிர்வாகத்தின் முடிவை மாற்றி நவம்பர் 15 ஆம் தேதிவாக்கில் துவங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

  • ஆலையையும், இணைமின் திட்டத்தையும் புணரமைக்கும் பணிக்கு தேவையான உதிரிபாகங்களை உடனே வால்சந்த் நகர் நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.

 

  • ஆலையில் உள்ள கெஸ்டு ஹவுஸ்சில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்திற்கு பங்குத் தொகை வழங்கியவர்களுக்கு உடனடியாக பங்குப் பத்திரம் வழங்க வேண்டும்.

 

  • 2015-2016, 2016-2017 ஆம் ஆண்டுக்கு மாநில அரசு அறிவித்த (SAP) கூடுதல் விலை டன்னுக்கு ரூ. 450 வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ. 33 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு விதைக்கரணை இலவசமாக வழங்க வேண்டும்.

 

  • நடப்பு பருவத்திற்கு வெட்டப்படும் கரும்புக்கு, தாமதம் இல்லாமல் வெட்டிய 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட வகையில் வரவேண்டிய தொகை ரூ. 15 கோடியை உடனே பெற வேண்டும். மற்ற ஆலைகளில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை உடனே பெறவேண்டும்.

 

  • கரும்பு வெட்டுவதற்குமுன் சாலைகளைச் சரிசெய்தும், சாலையின் குறுக்கே தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

  • காலிப் பணியிடங்களுக்கு தற்க்காலிக பணியாளர்கள் நியமிக்கும் போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.

 

  • வெட்டாள்களை நியமிப்பதும், கூலியை வழங்குவதும் ஆலைநிர்வாகமே கண்காணித்து வழங்க வேண்டும்.

 

  • எரிந்த கரும்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனே வெட்டி கழிவு இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.