Skip to main content

காங்கிரஸ் நடத்திய 'விவசாயிகள் சங்கமம்' மாநாடு-5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு!

Published on 11/10/2020 | Edited on 11/10/2020
 'Farmers Association' Conference organized by Congress - 5,000 volunteers participate!

 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தில் 'விவசாய சங்கமம்' என்கிற பெயரில் விவசாய மாநாட்டை திருவண்ணாமலை நகரில் அக்டோபர் 11ந்தேதி நடத்தியது. மாநில மாநாடு போல் நடந்த இந்த விவசாய மாநாட்டுக்கு வடமாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரும், விவசாயிகளும் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 3, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக பா.ஜ.க அரசை கண்டித்தும், உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவின் யோகி ஆட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விவசாயிகள் சங்கமம் நிகழ்வு திருவண்ணாமலை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில், தனியார் ஒருவரின் 10 ஏக்கர் நிலத்தை நிரவி பெரிய பந்தல் அமைத்து நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செயல்தலைவர்கள் ஜெயக்குமார், மோகன்குமாரமங்களம், எம்.பி ஜோதிமணி என பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வந்திருந்தனர். அதேபோல் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு உட்பட பல முன்னணி தலைவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மாநாட்டில் மத்திய பா.ஜ.க அரசின் விவசாய விரோத சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்கிற தலைப்பில், காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தொகுத்த புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை தேசிய பொதுச்செயலாளர் பிரசாத் வெளியிட, மாநில காங்கிரஸ் செய்திப்பிரிவு தலைவர் கோபண்ணா பெற்றுக்கொண்டார். மாநில தலைமையுடன் ஆலோசனைப்படி திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொண்டர்களை பார்த்து நிகழ்வுக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களே ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகர காவல்துறை அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. வாய்மொழி அனுமதியை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதன்பின் கூட்டத்தை பார்த்துவிட்டு மதியத்தில் இருந்து 50க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.