Skip to main content

லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்ட குடும்பத்தினர்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Family begging for bribes

 

 

வருவாய்த் துறை என்றாலே அதன் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ அதில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு லஞ்சம் என்கிற வருவாயை அள்ளிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. ஏழை, எளிய மக்களை கூட அவர்கள் விடுவதில்லை என்பதை உணர்த்துகிறது இச்செய்தி.

 

ஈரோடு மாவட்டம், அந்தியூரையடுத்துள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி பிரியா, சென்ற பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வாரிசு சான்று கேட்டு மாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.

 

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர், பணம் ரூபாய் 3000 கேட்டதாகக் கூறப்படுகிறது. தங்களால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக ப்ரியாவின் மாமியார் ஜோதிமணி மற்றும் இரண்டு குழந்தைகளும் 50க்கும் மேற்பட்ட முறை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வாரிசு சான்று வேண்டியும் அதன் நிலை குறித்தும் கேட்டு வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்று வழங்க முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க வேறு வழியில்லாமல் இறந்துபோன பிரியாவின் மாமியார் ஜோதிமணி, மகள்கள் கனிகா, யோகா ஸ்ரீ ஆகியோர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு  பணம் கொடுப்பதற்காக பிச்சை கேட்டு தரையில் அமர்ந்தனர். 

 

மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து லஞ்ச பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் வட்டாச்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். 

 

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தரப்பிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படுகிறது. புகார் அளிக்கும் அளவுக்கு எந்த தவறும் இங்கு நடக்கவில்லை என்றனர். 

 

கிராம நிர்வாக அலுவலருக்கு பணம் கொடுப்பதற்காக தாலூகா அலுவலகம் முன்பு அமர்ந்து இந்த குடும்பத்தினர் பிச்சை கேட்டது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.