Skip to main content

கள்ளநோட்டு... டிக் டாக் பெண்மணி... மண்ணுளி பாம்பு... பொறியில் சிக்கிய கயத்தாறு குற்றவாளி

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நேற்று சென்னை எழும்பூரில் தனியார் லாட்ஜில் 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுடன் தங்கியிருந்த மலைராஜன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த கள்ள நோட்டு எப்படி வந்தது யார் அதை அச்சடித்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் மலைராஜனிடம் போலீசார் விசாரணை நடந்தினர். ஆனாலும் மலைராஜன் கள்ளநோட்டுகளுடன் எழும்பூர் வர காரணமே போலீசார் வைத்த பொறிதான் என்பதுதான் சுவாரசியம்.

criminal arrested

 

கயத்தாரை சேர்ந்த மலைராஜன் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உணவகம் நடத்தி வந்துள்ளான். அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திரும்பவும் தமிழகம் வந்த மலைராஜன் விருதுநகரில் உள்ள கொம்பையா என்பவரின் அறிமுகத்தால் கோவையை சேர்ந்த தன்ராஜ் எனும் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்தவனுடன் தொடர்பில் இருந்துள்ளான். அப்போது தன்ராஜ் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் தருவதாக கூறியுள்ளான். இந்நிலையில் சென்னை தலைமை செயலகம் காலனி பகுதியில் பிடிபட்ட வேறு சில கள்ளநோட்டு கும்பல் சேர்ந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலைராஜன் பற்றி கூற மலைராஜனை கைது செய்ய முயன்ற போலீசார் அவனை அவன் பாணியிலேயே பிடிக்க முயற்சி செய்தனர்.

 

fake money

 

சம்பந்தப்பட்ட மலைராஜனை பிடிக்க நேரில் சென்றால் தப்பித்து விடுவான் என எண்ணிய போலீசார் அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு மண்ணுளி பாம்பு வேண்டும் என யாரோ ஒருவர்போல் பேசியுள்ளனர். ஆனால் மலைராஜனோ மண்ணுளி பாம்பு இல்லை 5 லட்சம் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு வேண்டுமானால் கிடைக்கும் என தன்ராஜ் பாணியில் கூறியுள்ளான் மலைராஜன். அதனை போலீசார் ஒத்துக்கொள்ள 50 லட்சம் கள்ளநோட்டுடன் எழும்பூர் தனியார் லாட்ஜுக்கு வந்த மலையரசனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

 

அப்போது அவன்கூடவே இருந்த பெண் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் டிக் டாக்கில் பழக்கமான ஸ்ரீதேவி என்று மலையரசன் தெரிவித்துள்ளான். ஸ்ரீதேவிக்கும் கள்ளநோட்டு கும்பலுக்கும் தொடர்புள்ளதாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

 

மேலும் இந்த வழக்கில் விருதுநகரை சேர்ந்த கொம்பையா, கோவையை சேர்ந்த தன்ராஜை போலீசார் கைது செய்ய விசாரணையை தொடக்கியுள்ளனர். இவ்வளவு தேர்தல் கெடுபிடிகள், பறக்கும் படைகள் என எல்லாவற்றையும்  தாண்டி 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு எப்படி சென்னை வந்தது எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.