Skip to main content

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு வாடிவாசலில் படுகாயம்!

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Ex-minister Vijayabaskar bull seriously injured at Vaadivasa

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்.

 

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த நிலையில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் அவரது 'கொம்பன் காளை' வாடிவாசல்களில் ‘நின்று’ விளையாடி பெயர் வாங்கியது. இந்த மகிழ்ச்சி சில ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே அதிகமான வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் ஜல்லிக்கட்டில் 'கொம்பன் காளை' பங்கேற்றது. “வாடியிலிலிருந்து கொம்பன் வரப்போகுது” என்று வர்ணனையாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த கொம்பன் வந்த வேகத்தில் தடுப்புத் தூணில் மோதியதில் அடிபட்டு இறந்தது. இந்த இழப்பு அவரது குடும்பத்திற்கான பேரிழப்பாக கருதப்பட்டது. கொம்பன் காளையை தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்து நாள்தோறும் பார்த்து வருகின்றனர்.

 

அதன் பிறகு தான் வளர்க்கும் காளைகளுக்கு மறைந்த கொம்பன் பெயரையே வைத்து வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், கருப்பு கொம்பன் என பல காளைகளை தோட்டத்தில் வளர்த்து வந்தார். வெளியில் சென்று வந்தால் நேராக காளைகளை பார்த்த பிறகே வீட்டிற்குள் செல்வது மன நிம்மதி தரும் என்று கூறிவந்தார். காளைகளை பராமரிக்கவும் வாடிகளுக்கு கேரவேன்களில் ஏற்றிச் செல்லவும் பலர் அவரிடம் வேலையில் உள்ளனர்.

 

Ex-minister Vijayabaskar bull seriously injured at Vaadivasa

 

இந்த நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டிருந்த நேரத்தில், அவரது 'கருப்புக் கொம்பன் காளை' வாடிவாசலில் இருந்து வரப்போகுது முடிஞ்சா புடிச்சுப்பாரு என்று வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீரர்கள் தயாராக, காளையுடன் வந்தவர்கள் துண்டுகளை வீசி வரவேற்க காத்திருந்த நேரத்தில் ரோஜா பூ மாலையுடன் வாடியிலிருந்து அதிவேகமாக சீறிப்பாய்ந்து வருவதைப் பார்த்த வீரர்கள் ஒதுங்கும் நேரத்தில் வந்த வேகத்தில் 'பழைய கொம்பன்' போல வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதி சரிந்தது.

 

கருப்புக் கொம்பன் அசைவற்று மயங்கிக் கிடந்த கருப்புக் கொம்பனை மீட்டு அவசர அவசரமாக ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். கருப்புக் கொம்பன் அடிபட்டதால் மனமுடைந்து காணப்பட்டார் மாஜி. கடந்த மாதம் திருவப்பூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கருப்புக் கொம்பன் காணாமல் போய் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.