Skip to main content

வெங்காயம் கிலோ 60 ரூபாய்... அதிசயம் ஆனால் உண்மை!        

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து அன்றாட தேவைக்கான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.


இந்த வாரச்சந்தைக்கு அருகே உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வாரச்சந்தை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வெங்காய விலை மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக காய்கறி கடைகளில் வெங்காய விற்பனை குறைந்தது. 

ERODE DISTRCT WEEKLY MARKET ONION PRICE 60 PER KG PEOPLES PURCHASE


இந்நிலையில் நேற்று (10.12.2019) நடைபெற்ற சத்தியமங்கலம் வாரச்சந்தையில் விவசாயிகள் பெருமளவு வெங்காயம் கொண்டு வந்தனர். கடைகளில் வெங்காயம் கிலோ ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு வரை ஒரு கிலோ 100 முதல் ரு.150 வரை விற்பனையான நிலையில் வெங்காயம், வாரச்சந்தையில் ரூபாய் 60-க்கு விற்பனையானதால் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கிச்சென்றனர். 
 

இந்நிலையில் அருகே உள்ள தினசரி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரை விலை கூறியதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் தினசரி மார்க்கெட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் நேரடி விற்பனையில், வாங்கும் பொதுமக்களுக்கு விலை குறைவாக கொடுக்கப்பட்டது. 





 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.