Published on 18/11/2018 | Edited on 18/11/2018

தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நாளை மறுநாள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புயல் சேதம் குறித்து ஆய்வு செய்த பின் டெல்லி சென்று மோடியை சந்தித்து புயல் குறித்த அறிக்கையை அவரிடம் எடுத்துரைத்து நிவாரண நிதி கோர இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதற்காக வரும் நவம்பர் 22ஆம் தேதி எடப்பாடி டெல்லி செல்ல இருக்கிறார் என்ற தகவல் தற்போது வந்துள்ளது.