Skip to main content

திமுக ஊராட்சி சபைக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை பந்துகள்...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

dmk


 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி ஒன்றிய கிராமசபைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கே.பி. முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார்,  திண்டுக்கல் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறை, நிறைகளை கேட்டறிந்த பின்பு, ஊராட்சி சபை முடிந்து வீட்டிற்கு செல்ல இருந்த பொதுமக்களுக்கு மு.பெ.சாமிநாதன் மற்றும் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்
விவசாயிகளுக்கு விதை பந்துகளை வழங்கினார்கள். இதனை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு பாக்கெட்டில் 4 விதைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த புதிய முயற்சி பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்