Skip to main content

தீபாவளி; கடலூரில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Diwali; Police intensive surveillance in Cuddalore
மாதிரி படம்

 

ஒவ்வொரு பண்டிகையின் மறுநாளும், தமிழ்நாட்டில் மண்டலம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் டாஸ்மாக்கில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்பது குறித்தான தகவல்கள் வரும். அதுவும் தீபாவளி பண்டிகையின் போது மதுவிற்பனையின் அளவு எப்போதுவும் விட சற்று கூடுதலாகவே இருக்கும். 

 

தமிழ்நாட்டை அடுத்துள்ள பாண்டிச்சேரியில் மது வகைகளின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மது கடத்துவது வழக்கமாக நடைபெறும். குறிப்பாக உயர் ரக மது வகைகளின் மதுவின் விலை குறைவு என்பதால் உயர் ரக வகையான மதுவும் அதிகளவில் கடத்தப்படும். சாராயமும் கடத்தப்படுகிறது. அதனை கடலூர் சோதனைச் சாவடிகளில் போலீஸார் சோதனையிட்டு பறிமுதல் செய்வதும் வழக்கமாக நடைபெறும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் நாளை (12ம் தேதி) தீபாவளி கொண்டாடவுள்ள நிலையில், கடலூர் எல்லையில் போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

நேற்று இரவில் இருந்து கடலூர் சோதனைச் சாவடியில் கடலூர் போலீஸாரும், மதுவிலக்கு பிரிவு துறையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சோதனையில் பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்களை போலீஸார் அங்கேயே கீழே கொட்டி அழித்துவருகின்றனர். அதேபோல், மதுவை கடத்துபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் மற்றும் தண்டனை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவில் மது கடத்துபவர்களின் வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.