Skip to main content

துறைவாரியாக அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்த மாவட்ட ஆட்சியர்..! 

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

District Collector has set a target to collect fines by department ..!

 

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்துள்ளது. அதில் வெளியே செல்லும் பொதுமக்கள், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடத்திலும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அபராதம் வசூல்செய்து வருகின்றனர்.

 

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் துறைவாரியாக இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். வட்டார மருத்துவ அதிகாரி, பேரூராட்சி செயல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் தினமும் 5,000 ரூபாய் கட்டாயம் அபராதம் வசூலித்தாக வேண்டும். அதேபோல், மாநகராட்சி அதிகாரி ஒவ்வொருவரும் 20 ஆயிரம் ரூபாய் கட்டாயம் அபராதம் வசூலிக்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 10,000 ரூபாயும், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டாயம் வசூலித்து அரசு கணக்கில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.