Skip to main content

தெறித்து ஓடும் நிர்வாகிகள்- தவிக்கும் தினகரன்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில் 15 நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

 

ட்


வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. அதிலும் வரும் 23 மற்றும் 24ந்தேதி விடுமுறை நாளாக உள்ளது. மீதியுள்ளது நான்கு நாட்களே. ஆனாலும் இன்னும் மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதில் திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளும் அடக்கம்.


ஏன் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லையென அமமுக நிர்வாகிகள் சிலரிடம் நாம் கேட்டபோது, ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து தினகரன் பின்னால் வந்தோம். இங்கு வந்து லட்சங்களில் செலவு செய்துவிட்டோம். அப்படியிருக்க தேர்தலில் நில்லுங்கள், செலவு செய்யுங்கள் எனச்சொல்கிறார் தினகரன். ஆளும்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக என இருபெரும் கட்சிகளுக்கு மத்தியில் சுண்டெலி நாங்கள். இது அவருக்கும் தெரியும். ஆனால் நில்லுங்கள் எனச்சொல்கிறார்.


திருவண்ணாமலை தொகுதியில் நில்லுங்கள் என முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவரும், மா.செவுமான பஞ்சாட்சாரத்தை கேட்டார்.  என்னால் முடியாது என பின் வாங்கிவிட்டார். தொகுதியில் பெரும்பலமாக வன்னியர் வாக்கு உள்ளதால் நீங்கள் நில்லுங்கள் என தெற்கு மா.செ தர்மலிங்கத்திடம் சொன்னார்.  என்னிடம் பணமில்லை என அவரும் தயங்கிவிட்டார்.


வேலூர் தொகுதியில் நில்லுங்கள் என முன்னால் எம்.எல்.ஏக்களான ஞானசேகரன், கலையரசன், முன்னால் மா.செ க்களான சிவசங்கரன், வாசு போன்றவர்களிடம் பேச, பணமில்ல, நீங்க தர்றதாயிருந்தா நிற்கிறேன், இல்லைன்னா இல்லை என ஒவ்வொருவரும் சொல்லிவிட்டனர். தற்போது, முன்னால் அமைச்சர் பாண்டுரங்கனிடம் பேசி அவரை நிற்க வைப்பதாக பேசிவைத்துள்ளார்.


அரக்கோணம் தொகுதியில், முன்னால் எம்.பி கோபாலை நிற்கச்சொன்னார் தினகரன்.  அவர் முடியாது என்றதால் அவரது மகனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ பார்த்திபனிடம், நீங்க நில்லுங்க, நீங்க சொல்ற ஆளுக்கு எம்.எல்.ஏ சீட் தந்துடலாம் எனச்சொல்ல அவரும் தயக்கத்தில் உள்ளார். இதனால் தான் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு பெரும்பாலானவற்றுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையே வேட்பாளராக நிறுத்திய தினகரன், சோளிங்கர் தொகுதியில் பார்த்திபனை அறிவிக்காமல் உள்ளார்.  இதேப்போல் ஆரணி தொகுதியில் சிலரை கேட்க அவர்கள் எங்களால் முடியாது என ஓடிவிட்டார்கள்.


தேர்தல் செலவுக்குன்னு பணம் எதுவும் தரமாட்டாறாம், வேட்பாளராக நிற்பவர்கள் தான் பார்த்துக்கனுமாம், ஜெயிக்கறமாதிரியிருந்தா செலவு செய்யலாம், பூத்ல உட்காரவைக்கவே ஆள் இல்லாம இருக்கோம், இதுல எங்க செலவு செய்து நிக்கறதுன்னு, சீட்டே வேணாம்னு கட்சி நிர்வாகிகள் தலை தெறிக்க ஓடறாங்க, அதனால் தான் மீதி தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கறது தாமதமாகிறது என்றார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.