Skip to main content

மத்திய அரசை கண்டித்து பாதுகாப்பு படைக்கல தொழிற்சாலை தொழிலாளர்கள் 1 மாத வேலைநிறுத்தம் அறிவிப்பு!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

மத்திய அரசை கண்டித்து ஒரு மாத வேலை நிறுத்தம் பேராட்டம் நோட்டீசை துப்பாக்கி தொழிற்சாலை HAPP தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய அரசின் பாதுகாப்புத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சென்னை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 6 இடங்களில் உள்பட இந்தியாவின் 41 படைக்கல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாட்டின் ராணுவத்திற்கும் சிறப்பு பிரிவின் பாதுகாப்பு பிரிவு போலீசுக்கு நவீன ரக துப்பாக்கிகள் தளவாடப் பொருட்கள் ஆண்டுக்கு ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.

 Defense plant workers announce 1-month strike to denounce federal government


இவற்றை மத்திய அரசு நேரடியாக நிர்வகிப்பது தவிர்த்து தனியார்மயமாக்குவதற்கான வேலையில் இறங்கி உள்ளது. இதனால் மறைமுக ஊழியர்கள் 1 லட்சம் பேர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மத்திய அரசின் தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து முயற்சியை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை ஒரு மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளனர்.

 

 Defense plant workers announce 1-month strike to denounce federal government


இதன் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நாவல்பட்டில் HAPP தொழிற்சாலைகளில் எம்பிளாய்மெண்ட் யூனியன், அம்பேத்கார் யூனியன், பாரதிய மஸ்தூர் சங்கம் ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டக்குழு சார்பில் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்யை அந்தந்த நிர்வாகங்களிடம் கொடுத்து அதிர்ச்சியை கொடுத்தனர். 

எம்பிளாய்மெண்ட் யூனியன் இரணியன் சத்திய வாசகன் தலைமையிலும், பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ரகுமான் அலெக்சாண்டர் தலைமையிலும், ஐஎன்டியுசி சார்பில் பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் தனித்தனியே பொது மேலாளர் ராகவேந்திரா சோப்ராவிடம் வேலை நிறுத்த போராட்டத்திற்கான நோட்டிஸ்யை வழங்கினர்.

துப்பாக்கி தொழிற்சாலை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் பொதுமேலாளர் சிரீஸ்கேராவிடம் போராட்டத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலையில் போராட்டக்குழு சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஒரு மாதம் போராட்டம் காரணமாக தொழிற்சங்கங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. 

 

 Defense plant workers announce 1-month strike to denounce federal government

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மீண்டும் வேலைகேட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட 65 பேர் மீது போராட்டத்தை தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ள சம்பவம் நடந்தது. 

திருச்சி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக 150 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் ஏற்கனவே வேலைப் பார்த்த தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் புதிதாக ஆட்களை தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணி கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துப்பாக்கி தொழிற்சாலையில் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணிக்கு சென்ற பொழுது பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பெண்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் நவல்பட்டு போலீசார் இப்பிரச்சனை சம்பந்தமாக வேலை இழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 34 பேர் மீதும் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவன தொழிலாளர்கள் 20 பேர் மீதும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மீதும் போராட தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் நவல்பட்டு போலீசாரின் இந்த செயல் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது தொழிற்சாலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்களே 1 மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு இறங்கிய இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.