Skip to main content

உறவினர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

cuddalore district government hospital incident investigation underway

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் உடல்நலக்குறைவால் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதேபோல், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உடல்நலக்குறைவால் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில், ஜாகீர் உசேனுக்கு கரோனா உறுதியான நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (13/04/2021) உயிரிழந்தார். அதேபோல், ஆறுமுகமும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில், ஜாகீர் உசேன் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உறவினர்களிடம் இன்று (14/04/2021) காலை ஒப்படைப்பட்டது. அந்த உடலைக் கொண்டு சென்று இஸ்லாமிய முறைப்படி பெருமாத்தூர் பகுதியில் அடக்கம் செய்தனர். தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறுமுகத்தின் உறவினர்கள், அவரின் உடலைப் பெற்றுச் சென்றனர். அப்போது புதுப்பேட்டையில் மூடப்பட்டிருந்த உடலைத் திறந்து பார்த்தபோது, அது ஆறுமுகத்தின் உடல் இல்லை எனத் தெரிய வந்ததை அடுத்து, அந்த உடலை மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்பு இந்த உடல் ஜாகீர் உசேன் என்பது தெரிய வந்தததை அடுத்து உடலை அவரது உறவினர்களிடம் மருத்துவமனை ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, ஜாகீர் உசேனின் உடலையும் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தனர்.

 

இந்நிலையில், ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுக்க பெருமாத்தூர் சென்ற அவரது உறவினர்களுக்கு ஜாகீர் உசேன் குடும்பத்தினர் அனுமதி அளித்த நிலையில் அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு மருத்துவமனையின் இணை இயக்குனர் ரமேஷ், "உறவினர்கள் அடையாளம் கண்ட பிறகே இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலைத் தவறுதலாக ஒப்படைத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

அரசு மருத்துவமனையில் இறந்த இருவரின் உடல்கள் தவறுதலாக வெவ்வேறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.