Skip to main content

சாராய பெண் கூட்டாளிக்காக எதிர்காலத்தை இழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

Published on 16/08/2019 | Edited on 17/08/2019

 

கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைசாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்  11.08.2019  இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து தீவிர சோதனை நடத்திக்கொண்டிருந்த போது  அருகில்  வந்த பொலீரோ காரை நிறுத்துவதற்கு முன்பாகவே காரை ஓட்டியவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரில் இருந்த பெண்ணை பிடித்ததுடன், காரிலிருந்த 144 மதுபாட்டில்கள்  மற்றும் 30 லிட்டர்  சாராயத்தையும், அவற்றை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

 

c

 

அந்த பெண்ணை விசாரித்ததில், ‘எனது பெயர் சமுத்திரக்கனி(48). விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி. நாங்கள் கூலி வேலை செய்ததுடன் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தியாகதுருகம் பகுதியில் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தோம். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது கணவர் இறந்ததால் தற்போது சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.

 

என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் சாராய வழக்குகள் உள்ளன. நான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தபோது அம்மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தேரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. நான் புதுச்சேரியிலிருந்து மது, சாராய பாட்டில்கள் கடத்தும் போது அவர் பல வகைகளில் உதவிகள் செய்தார். பின்னர் அவர் கடலூருக்கு மாறுதலாகி வந்த பிறகு நேரில் சந்தித்து எனது குடும்ப கஷ்டங்களை கூறினேன். அதனால் என்னை புதுச்சேரிக்கு காரில் அழைத்து சென்றார். அங்கு மது, சாராய பாட்டில்கள் வாங்கி கொண்டு சீர்காழி செல்வதற்காக திட்டமிட்டோம்” என்று கூறியுள்ளார்.

 

v

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வரும் சுந்தரேசன்   சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் வைத்துக்கொண்டு விதவையான அவருக்காக  புதுச்சேரியில் இருந்து அவ்வப்போது மதுபாட்டில்கள்  மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி  வந்துள்ளார். சுந்தரேசன் இன்ஸ்பெக்டர்  என்பதால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை வாகனத்தில் கடத்தி வருவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. சோதனை சாவடியிலும் அவரது காரை பணியில் இருக்கும் போலீசார் சோதனை செய்வது கிடையாது. இதனால் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சமுத்திரக்கனிக்கு தொடர்ச்சியாக உதவி செய்துள்ளார். 

 

இன்ஸ்பெக்டர் சுந்தரேசனின் பழக்கத்தை பயன்படுத்தி, சமுத்திரக்கனி இதை  தொழிலாகவே செய்து வந்துள்ளார். இதுதவிர இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அவரை விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கிருந்தும் சமுத்திரக்கனியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கொடுத்துள்ளார். உள்ளூர் போலிசாரிடம் சிக்கினால் அவமானம் என கருதி தப்பிக்க முயற்சித்து வசமாக மாட்டிக்கொண்டார்.

 

அதையடுத்து கடலூர் மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய காவல்துறை இன்ஸ்பெக்டரே விருப்பமான விதவையின் வாழ்வாதாரத்துக்கு உதவ போய் தன் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.