Skip to main content

'பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும்'- மாநில முதலமைச்சர்களுக்கு அண்ணாமலை கடிதம்!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

crackers related tamilnadu bjp president annamalai wrotes a letter for all chief ministers

 

பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், "விழாக்களிலும், பண்டிகைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் தயாராகிறது.  இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். 

 

சில மாநிலங்களில் காற்று மாசுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்வு கண்டு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

 

ffff

 

விருதுநகர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரம் பட்டாசு தொழிலை நம்பியே இருக்கிறது. பாரம்பரியம், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வணிகர் நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தடையை விலக்க வேண்டும். வெளிநாடுகள் அனைத்திலும் பண்டிகைகளில் பட்டாசு வெடிக்க எந்த தடையும் இல்லை. 

 

ஜப்பானில் கரோனா காலத்திலும் வாண வேடிக்கைகள் நடத்தி மக்களிடையே அந்த நாடு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த திருவிழா லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உண்டாக்கும். எனவே, உரிய அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.