Skip to main content

8 வழிச்சாலை... நம் கனிம வளங்களை அள்ளிச் செல்லும் ஜிண்டால் முதலாளிக்கானது..  எடப்பாடி அரசுக்கு பாலபாரதி எச்சரிக்கை..

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

போராடும் மக்களை கொன்றுகுவிக்கும் ஏதேச்சை அதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

 

balabarathi


 

‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது,

மத்தியில் ஆளும் மோடி அரசும், அதன் ஊதுகுழலாகச் செயல்படும் மாநில எடப்பாடி அரசும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால்.. கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்தும் ஏழை, எளிய மக்களை காவு வாங்கி பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என எடப்பாடியார் அடம்பிடிக்கிறார். சாதாரண மக்களின் போக்குவரத்து வசதிக்காகவா இதைச் செய்கிறார்? சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரும்பையும், பிளாட்டினத்தையும் எடுத்து ஜிண்டால் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். அவர்கள் இலகுவாக சென்னை துறைமுகத்திற்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கே இந்த எட்டுவழிச்சாலை. இதற்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலைங்களையும், மக்களின் வாழ்விடங்களையும், மலைகளையும் அழிக்கத் துடிக்கிறார்கள். ஏற்கனவே, சேலத்திற்கு விமானச் சேவை அளிக்கப்பட்டதும் ஜின்டால் முதலாளி வந்து இறங்குவதற்குத்தானெ ஒழிய மக்களுக்கானது அல்ல.

 

balabarathi


 

 

 

போராடுகின்ற மக்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார்கள். யார் சமூக விரோதி? மணலைக் கடத்துபவன், மலைகளை வெட்டியெடுப்பவன், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவன், பொது வினியோகத் திட்டத்தை சீரழிப்பவன், அரசாங்க சொத்தை கொள்ளையடிப்பவன், மக்கள் வரிப்பணத்தை சுரண்டுபவன் இவர்கள் தானே உண்மையான சமூக விரோதி. மதுக்கடைகளுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ‘மக்கள் அதிகாரத்தை’  சேர்ந்த 6 பேர் மீது தேச விரோத வழங்கு போட்டுள்ள எடப்பாடி அரசுதான் சமூக விரோத அரசு.

 

 

கையில் கொடிகூட கொண்டு போகாமல் குழந்தைகள், பெண்களுடன் அமைதியாக பேரணி சென்ற தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வெகுதூரத்திலிருந்து அதிநவீன துப்பாக்கியுடன் குறிப்பிட்ட நபர்களை குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். ஒருவர்கூட முழங்காலுக்கு கீழே சுடப்படவில்லை. நெஞ்சிலும், தலையிலும், வாயிலுமாக சுடப்பட்டுள்ளனர். எடப்பாடி அரசு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதேச்சையதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடாமாட்டோம். போராடும் மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம். மத்தியில் பிஜேபி அரசையும், மாநிலத்தில் அதிமுக அரசையும் வீழ்த்துவதற்கு விரிவான களம் அமைப்போம். என்றார் பாலபாரதி..

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.