Skip to main content

நண்பரை சுட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்  

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

covai puliyakulam ayothi ravi incident police enquiry shocked

 

கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 45). இவர் இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட துணைத்  தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி தனது மகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தனது நண்பர் தீபக் என்பவரிடம் தான் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றைக் காட்டி எவ்வாறு சுடுவது என்று கூறும்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டு தீபக்கின் இடது கால் தொடையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த தீபக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

மருத்துவமனையில் சிகிச்சைக்கு தீபக் சேரும்போது மருத்துவர்களிடம், "காட்டு பன்றி வேட்டையின் போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது" என அயோத்தி ரவி  தெரிவித்துள்ளார்.  இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அயோத்தி ரவி வீட்டில், போலீசார் நடத்திய சோதனையில் இரு துப்பாக்கி 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அயோத்தி ரவி கைது செய்யப்பட்டு அவர் மீது ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பிறகு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், "கடந்த 2018 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், சென்னையைச் சேர்ந்த பாட்டில் பாஸ்கர் என்பவரிடம் மற்றொரு துப்பாக்கியும் 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக" தெரிவித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். 15க்கும்  மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் போதைப் பொருட்கள் கடத்தல் விற்பனையில் இவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.