Skip to main content

உள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

CORPORATION ELECTION PROCESS TAKE STATE Election Commission orders to appoint the Officers

அதன்படி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை என்பது உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்