Skip to main content

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 23/05/2021 | Edited on 23/05/2021

 

coronavirus complete lockdown cm discussion with district collectors

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (24/05/2021) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

 

இந்த ஆலோசனையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்