Skip to main content

திருச்சியில் நடைபெறவிருக்கும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்...

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

The corona vaccination camp to be held in Trichy

 

திருச்சி மாவட்டத்தில் கரோனா நோயைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதியான நாளை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் தேதி தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தற்போது திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் தேதி 6150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்