Skip to main content

தமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..?

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

nm,

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,272 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் சில வாரங்களாக தொடர்ந்து 1,000க்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வருகிறது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 6,51,370 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,222 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,97,033 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. இதன்மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை 97,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 81.41 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்