Skip to main content

போலி கல்வி சான்றிதழ்; கூட்டுறவு சங்க ஊழியர் பணியிடைநீக்கம்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Cooperative society employee who joined with fake education certificate suspended

 

போலிக் கல்விச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கூட்டுறவு சங்க ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆரியூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் அலுவலக உதவியாளராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 8 ஆம் வகுப்பு படித்துள்ளதாக போலியான கல்விச்சான்றிதழ் தயாரித்து வேலையில் சேர்ந்துள்ளதாகப் புகார் கிளம்பியது. 

 

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சங்கத் தலைவர், சங்கச் செயலாளர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அதில், அலுவலக உதவியாளர் ஜெயராமன் போலிச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜெயராமனை சங்கத் தலைவர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்