Skip to main content

புதுவையில் கல்லூரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

protest

 

புதுவையில் ஏழாவது ஊதியக்குழு அமுல்படுத்தக்கோரி கல்லூரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 

புதுச்சேரி அரசு சார்பு மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்பட18 கல்லூரிகளில் பணியாற்றும் 4000 கல்வி நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

7 வது ஊதிய குழுவை அமுல்படுத்துதல், 6-ஆவது ஊதியக்குழுவின் நிலுவை  சம்பளத்தை வழங்க கோருதல்,  10 வருடத்துக்கும் மேலாக  பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   புதுச்சேரியில் உள்ள 19 அரசு சொசைட்டி கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்களும் ஆசிரியரல்லாத ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்