சி.ஐ.டி.யு. சார்பில் சென்னை அண்ணாசலை தாராப்பூர் டவர் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். கட்டுமான நலவாரியத்தைப் போல் அனைத்து நலவாரிய தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.