Skip to main content

சோழர்கால விஷ்ணு கோவிலுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு! -இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு! 

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
high court chennai



சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு  ஆலயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில்,  இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னையைச் சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் அருள்மிகு நான்மதியப் பெருமாள் கோவில் உள்ளது.  இத்திருத்தலம், சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் புகழ் பெற்று விளங்கியது. 


முதல் சங்கம், பூம்புகார் அருகில் உள்ள இங்குதான் தமிழ்ப் புலவர்களால் உருவானதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தற்போது பராமரித்து வருகிறது. 
 


சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கோசாலாவிற்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,  உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆலயம் சிதிலமடைந்து காணப்படுகிறது.



கடந்த 2009-ம் ஆண்டு,  இந்து சமய அறநிலையத்துறை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களுக்கு சுமார் 4,000 ஒய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அறிவித்தது. ஆனால்,   இந்த ஆலயத்திற்கு உரிய காவலர்கள் நியமிக்கப்படாததால் சிலைகள் திருடப்பட  வாய்ப்பு உள்ளது.


அதனால், தற்போது உள்ள காவலர்கள் மற்றும் சிதிலமடைந்த கதவுகளை மாற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட  வேண்டுமென்றும்,  மேலும் ஆலயத்தின் பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற  காவல்துறையைச் சேர்ந்த நபர் அல்லது ராணுவத்தைச் சேர்ந்த நபரை  பாதுகாப்பு பணியில்  அமர்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு குறித்து இந்து  சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1-ம் தேதி ஒத்திவைத்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.