Skip to main content

3 மாதம்தான் டைம்... இல்ல பதவியை ராஜினாமா செஞ்சிடுவேன்... - அமைச்சர் கந்தசாமி அதிரடி பேச்சு!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

தனது கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றவில்லை என்றால்  பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

puducherry minister kandasamy speech

 



புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பேடி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கந்தசாமி, "நமது முதலமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்படுவதில் எங்கோ ஓரிடத்தில் தவறு உள்ளது. இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில் எனது துறைதான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளமில்லை. சுகர்மில் ஓடவில்லை. ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வேலையில்லாததால் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

puducherry minister kandasamy speech

 



நாங்கள் இலவச அரிசி போடவேண்டும் என்கிறோம். கவர்னர் பணம் போடவேண்டும் என்கிறார். அரிசி வழங்காத 22 மாதத்துக்கும் பணம் வழங்க கவர்னரும், முதலமைச்சரும் நிதி தர வேண்டும். அதற்கான நிதியை தயார் செய்யவேண்டும்.  இதுபோன்ற எனது கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அதன்பின் மக்களோடு மக்களாக இருந்து போராடுவேன். ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரையும் பார்ப்பேன். இதை நான் அரசியலுக்காக பேசவில்லை. எதையும் செய்ய முடியாமல் நான் அமைச்சராக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது" என்றார்.

அதைத்தொடர்ந்து தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு ஒன்றை ஆளுநர் கிரண்பேடியிடம் அமைச்சர் கந்தசாமி வழங்கினார். முன்னதாக தனது பேச்சினை மொழி பெயர்த்து கவர்னரிடம் கூறுமாறு கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரனிடம் கந்தசாமி தெரிவித்தார். அதன்படி அமைச்சர் கந்தசாமி பேசப்பேச ஸ்ரீதரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கிரண்பேடியிடம் கூறினார்.

பொது வெளியில் அமைச்சர் ஒருவர் விரக்தியில் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கூறியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.