Skip to main content

திருமணத்தை மீறிய உறவில் பிறந்த 2 குழந்தைகளை கொன்ற தாய்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022


 

childrens incident police investigation tenkasi district

 

திருமணத்தை மீறிய உறவின் மூலம் பிறந்த குழந்தை கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரிக்கு சசிகுமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை முத்துமாரி குளத்தில் வீசி கொலை செய்திருக்கிறார். அந்த வழக்கில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தையையும் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.

 

இது குறித்த புகாரில் கைது செய்யப்பட்ட முத்துமாரியும், சசிகுமாரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், குழந்தையின் உடலைத் தோண்டி எடுக்கப்பட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட இருவரும், நொச்சிக்குளம் கிராமத்தில் குழந்தையைப் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண்பித்தனர். 

 

அங்கு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், சாக்குப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டனர். அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்