Skip to main content

சென்னையில் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்ப முயன்றவர் திண்டிவனத்தில் கைது...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

 

chennai incident arrested in dindivanam

 

 

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ளது காட்டுப்பாக்கம். இந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது 17 வயது மகள் மீனா. இவரை நேற்று திருவண்ணாமலையைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் சண்முகம் வயது 41 என்பவர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதாக பல்வேறு பகுதி போலீசாருக்கும் சென்னையிலிருந்து தகவல் தரப்பட்டுள்ளது. 

 

அந்த தகவல் திண்டிவனம் ரோசனை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ரோசனை போலீசார் நேற்று மாலை திண்டிவனம் காலேஜ் ரோட்டில் பாஞ்சாலம் கூட்டுரோடு செஞ்சி திருவண்ணாமலை செல்லும் பிரிவு சாலை அருகில் உதவி ஆய்வாளர் வினோத், காவலர்கள் ராஜேஷ், சாமிநாதன் ஆகியோர் கொண்ட டீம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். 

 

விசாரணையில் அவர் முரண்பாடாக பதில் அளிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் சென்னையில் மீனா என்ற இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி டூவீலரில் தப்பி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரோசணை போலீசார் கொலையாளியை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு சென்னை நாசரேத் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயரங்கன், பூந்தமல்லி உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கிருந்து திண்டிவனம் ரோசனை காவல் நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் கொலையாளி சண்முகத்தையும் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனர். பின்னர் பூந்தமல்லி போலீசார் சண்முகத்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்ய சென்னை அழைத்து சென்றுள்ளனர். கொலை செய்த சில மணி நேரங்களிலேயே கொலையாளியை போலீசார் பிடித்து கொடுத்த  திண்டிவனம் ரோசனை போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.