தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (30.10.2023) மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் நாளை (31.10.2023) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று நவம்பர் 3 ஆம் தேதி (03.11.2023) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.