Skip to main content

காவிரி கடைமடை தூர்வாறல்: விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழு..! ஆட்சியர் தகவல்..!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Cauvery shoplifting; Monitoring committee consisting of farmers ..! Collector information ..!

 

கடலூர் மாவட்டத்தில் 444 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகள் வரும் 25ஆம் தேதிக்குள் நிறைவுபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் தற்போது குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கான நெல் நடவு பணிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில், பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று (12.06.2021) திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு 12 முதல் 16 நாட்களுக்குள் வந்து சேரும் என தெரிகிறது. அவ்வாறு வந்து சேரும் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

அவர் கூறும்போது, "கடலூர் மாவட்டத்திலுள்ள டெல்டா பகுதியில் 58 பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணி துவங்கப்பட்டு, இதற்காக ரூபாய் 2.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 202 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாய்க்கால்கள் சீரமைக்கப்படவுள்ளன.

 


இதேபோன்று பெரிய வாய்க்கால்களில் இருந்து பிரிந்து செல்லும் சிறிய பாசன வாய்க்கால்கள் 242 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளன. மொத்தத்தில் 444 கிலோமீட்டர் வாய்க்கால் பகுதிகள் சீரமைக்கப்படுகின்றன. 112 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளைக் கண்காணிக்க அந்தந்த பகுதி உழவர்கள், பொதுப்பணித்துறையினர், வேளாண்மைத்துறையினர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்தடையும்போது அதனை வீணாக்காமல் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும். நடவு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேவையான உரம், தேவையான விதை ஆகியவை இருப்பில் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அந்தந்த கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.