Skip to main content

சென்னை போரூர் கார் நிறுத்தத்தில் திடீர் தீ;கொழுந்துவிட்டு எரியும் கார்கள்!!

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே கார் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கார்கள் பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. நேற்று பெங்களூருவில் விமான கண்காட்சியில் நடந்த  தீ விபத்தை போன்று சென்னையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

car fire accident in chennai porur

 

ராமச்சந்திரா மருத்துவமனை எதிரே ''ஊட்டோ'' என்ற கால் டாக்ஸி நிறுவனத்தின் கார்கள் நிறுத்திவைக்கும் இடத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 

சுமார் 4 முதல் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு உள்ள அந்த இடத்தில் சுற்றியும் கழிவுகள் கொட்டப்படுவதால் அதில் பற்றிய தீயை சரியாக அணைக்காததால் மற்ற பகுதிகளுக்கு பரவி இறுதியில் கார் பற்றி  எரிந்து வருகிறது. தற்போது 50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது.

 

இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இரண்டு வாகனங்களில் வந் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் தீப்பற்றி டயர்கள் வெடித்து சிதறியதால் அருகில் சென்று தீயை அணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவும், சவாலாகவும் உள்ளதாக தீயணைப்பு துறையினர் கூறினர். 2 தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே வந்திருப்பதால் தீயை அணைக்க போதுமான வசதியில்லாததாக பார்க்கப்படுகிறது. 

 

தற்போது கார் நிறுத்தத்தில்  தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.